தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. Read more