யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் காயமடைந்துள்ளனர். கைதடி – மானிப்பாய் வீதி ஊடாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் பலாலிவீதி வழியாக இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்கு உள்ளானது. காயமடைந்த இராணுவத்தினர் 15பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.