திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.