27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
கொவிட்-19 பரவல் ஆரம்பித்த நாள் முதல் நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர். இன்று மாலை 574 பேருக்கு தொற்றுறுதியாகி இருந்த நிலையில் இன்றுமாலை மேலும் 422 பேருக்கு தொற்றுறுதியானது. இதற்கமைய இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1096 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிககை 103,472 ஆக உயர்வடைந்துள்ளது.
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fengheஇன்று நாட்டிற்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் 19ம் திகதி சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் Wei Fenghe பதவியேற்றார் சீனாவின் மத்திய இராணுவக்குழுவின் உறுப்பினராகவும் அவர் தற்போது பதவி வகிக்கின்றார். எதிர்வரும் 29ம் திகதி வரை சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுதேவ ஹெட்டியாராச்சி அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டியாராச்சி சிறந்த அனுபவமிக்க சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார். 25 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர்இ முன்னணி ஊடக நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார்.
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னை கைதுசெய்ய தயாராகி வருவதாகவும் அவ்வாறு தன்னை கைதுசெய்வதைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 27 April 2021
Posted in செய்திகள்
புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் சகல விடயங்களையும் தடைசெய்வது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.