கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 101,658ஆக அதிகரித்துள்ளது. அதில், பிலவ வருட கொத்தணியில் 922 பேர் அடங்குகின்றனர். அத்துடன் இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 95,975 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 678 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.