கொவிட்-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் இறுதி அறிக்கையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 317ஆகும். அதில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 94 பேர் இனங்காணப்பட்டனர். ஏனைய 223 பேரும் கொழும்பு மாட்டத்துக்குள் இனங்காணப்பட்டனர். அதில், கெஸ்பேவையில் 51 பேருக்கும், கொம்பத்தெருவில் 15 பேருக்கும் வெள்ளவத்தையில் 15 பேரும் அடங்குகின்றனர். இன்றுக்காலை நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே கொழும்பு மாவட்டத்துக்குள் 223 பேருக்கு கொரோனா தொற்றியயிருக்கிறது.

கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, கெஸ்பேவ ஆகிய இடங்களைத் தவிர, ஏனையோர், பொரலஸ்கமுவ, கொட்டாவ மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.