எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மத்தெரி ((Yuri Materi) ஆகியோருக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர், ரஷ்ய தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.