இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.