Posted by plotenewseditor on 8 May 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 8 May 2021
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணியாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில், சபாநாயகரின் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த காரியாலயத்தில் பணியாற்றிய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சபாநாயகர் அந்தக் காரியாலயத்துக்கு வருகைதருவதை தவிர்த்துள்ளார்.
Posted by plotenewseditor on 8 May 2021
Posted in செய்திகள்
நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பதிவான மரணங்களே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது. இதற்கமைய, சுனந்தபுர, இளவாலை, கோங்கஹவெல, இரத்மலானை, தெய்யத்தகண்டி, பதுளை- மயிலகஸ்தென்ன, வாத்துவ, கொழும்பு-3, ரத்தொழுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தனர். Read more
Posted by plotenewseditor on 8 May 2021
Posted in செய்திகள்
வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர். இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீரினுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழி ஓடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நபரின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Posted by plotenewseditor on 8 May 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1914 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 338ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 763 பேர் குணமடைந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Posted by plotenewseditor on 8 May 2021
Posted in செய்திகள்
இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளார். அவர், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. ‘தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது’ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.