இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளார். அவர், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. ‘தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது’ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.