Header image alt text

நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வு இம்மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் கடிதமொன்று மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார் Read more

மலர்வு – 1963.03.03 உதிர்வு – 2021.05.09

காரைதீவைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் கடும் சுகயீனம் காரணமாக இன்று(09/05/2021) காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயரடைகின்றோம்.

80களின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக மக்கள் மத்தியில் தொண்டாற்றிய தோழர் பக்தன், இயல்பிலேயே இனப்பற்றும் சமூகப்பற்றும் மிகுந்தவர். Read more

மரண அறிவித்தல்!

Posted by plotenewseditor on 9 May 2021
Posted in செய்திகள் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றுபகல் காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

கழகத்தின் ஆரம்ப அணியில் பயிற்சி பெற்ற இவர் , அசாத்திய துணிச்சல் மிக்க போராளியாவார். 1985.05.09ல் வல்வெட்டித்துறையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, நேரடி மோதலில் மரணமானார்.