நாட்டில் மேலும் 44 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 22 வயதான யுவதியும் அடங்குவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனை தவிர 31 வயதிற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்டவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,58,333 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 3,547 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றுடன் அடையாளங்காணப்பட்டவர்களில் 1,25,360 பேர் குணமடைந்துள்ளனர்.

31,884 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.