2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி,  பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மற்றும் பிரத்தியேக பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை இந்த மாதம் 21ஆம் திகதியிலிருந்து, அடுத்த மாதம்11ஆம் திகதி வரை,

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பலாம் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

 எனவே பரீட்சார்த்திகள் இணையவழி ஊடாக கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்ப முடியும் என தெரிவித்த அவர்,எனினும் நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பி, பாடசாலைகள் திறக்கப்பட்டதும், பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை கையளிக்க  வேண்டும் என்றார்.