கொரோனா வைரஸ் ​தொற்றை தடுப்பதற்காக ஏற்றப்படும் தடுப்பூசி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த செயற்றிட்டங்கள், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றார்.