Header image alt text

நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வீடுகளிலேயே தங்கவைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது Read more

முள்ளியவளை முதலாம்  வட்டாரத்தைச் சேர்ந்த,15  வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். Read more

இன்று மேலும் 1,786 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 139,871ஆக உயர்ந்துள்ளது.

இந்த அரசின் செயற்பாடுகள் எதிர்பார்த்ததுதான். எனினும், இவ்வளவு தூரம் இனஒடுக்குமுறையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயம். உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை இடிப்பதன் மூலம், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனஒடுக்குமுறையின் பரிமாணத்தை உலகிற்கு அவர்களாக வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிலொன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன். Read more

14.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 23ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவர்களுள் ஒருவரும்,, அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான அமரர்.மகாதேவன் சிவநேசன் (தோழர் பக்தன்) அவர்களுக்கு எமது வீர அஞ்சலியை செலுத்தி நிற்கின்றோம்.

தோழர் பக்தன் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டம் “இணைய (சூம்) வழி” மூலமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16/05/2021) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Meeting ID: 860 8760 1116
Passcode: PLOTE2021

காலம் & நேரம்.. – ஞாயிற்றுக்கிழமை -16/05/2021 –
இலங்கை நேரம் மாலை 05.00 PM // லண்டன் நேரம் மதியம் 12.30 PM // ஐரோப்பா நேரம் பிற்பகல் 01.30 PM // கனடா நேரம் காலை 07.30 AM

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறும் முறை-
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் நாளை (13) முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும். இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வெளியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ´உதாரணமாக இன்று மே மாதம் 12 ஆம் திகதி. இன்றைய தினத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வெளியேற முடியும். நாளை 13 ஆம் திகதி அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும். 0 இருக்கும் போது அது இரட்டை எண்ணாக கருதப்படும். அதன்படி, இரட்டை எண்ணுக்கு உரிய தினத்தில் பயணிக்க முடியும்´ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க இங்கே அழுத்தவும்…. Read more

அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளிலும் விசேட வீதித் தடை ஏற்படுத்தப்படும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், ஒவ்வொரு மாகாண எல்லையிலும் முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படியினர் இணைந்து வீதித்தடைகளை அமைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம், குடும்பப் பயணங்கள் அல்லது வார இறுதி நாட்களில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரிய தூதுவர், சட்டமா அதிபர் கலந்துரையாடல்-

கொரிய தூதுவர் சந்தூஸ் வூன்ஜின் ஜியோக் மற்றும் சட்டமா அதிபருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட நிறுவனங்களை மேம்படுத்துவது மற்றும் உதவிகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க இங்கே அழுத்தவும்…. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று (10.05.2021) திங்கட்கிழமை முற்பகல் 10மணியளவில் அன்னாரது காரைதீவு இல்லத்தில் நடைபெற்றது.

இறுதி நிகழ்வில் தோழர் பவன் (கட்சியின் பொருளாளர்), தோழர் கேசவன் (உபதலைவர்), தோழர் சூட்டி(மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்), தோழர் கொன்சால் (மன்னார் மாவட்ட அமைப்பாளர்), தோழர் பீற்றர் (திருமலை), தோழர் சிவம் (வெண்கலச்செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர்), கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ராகவன், கமலநாதன், கிருபாமாஸ்டர் மற்றும் செந்தில், யூலி, முகுந்தன், தவராஜா, சங்கரி, ரோசி, கங்கா, ரமேஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முற்பகல் 11மணியளவில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. Read more