வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு சென்ற 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் மறைந்துள்ள பலரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழகத்தின் கியூபிரிவு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் கொரோனா நெருக்கடி கெடுபிடிகளுக்கு மத்தியில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் இந்தியாவிற்கு நுழைந்த இலங்கையர்கள் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் வைத்து இந்திய பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்னும் பலர் மறைந்திருப்பதாக பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து இரு மாநில பொலிசாரும் தேடுதல் நடத்தி வருகின்றார்கள்.

கர்நாடக மாநிலத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தமிழ்நாடு மதுரையில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் 29 பேர் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.