தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இதனை இன்று (18) தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான   கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.