எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

10 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கடந்த தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.