நாட்டில் நேற்று முன்தினம் (21) மேலும் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று(22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 33 பேர் ஆண்கள் எனவும், 38 பேர் பெண்கள் எனவும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளது.