மட்டக்களப்பு மாவட்டம், ஆறுமுகத்தான் குடியிருப்பில் வசிக்கும் முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளான மூ.இராசதுரை என்பவரின் குடும்பம் வாழ்வாதார வசதிகளின்றி வறுமையில் வாழ்ந்த நிலையில் அவர்கள் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய புளொட் அமைப்பின் சுவிஸ் கிளைத் தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 50,000 ரூபாய் நிதியில், அக் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவியாக கோழிக்கூடு அமைத்துக்கொடுத்து, கோழிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இன்று (29.06.2021) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் நிஸ்கானந்தராஜா(சூட்டி) , கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் ராகவன்(வரதன்) ஆகியோரால் மேற்படி உதவி வழங்கி வைக்கப்பட்டது.