Header image alt text

கழகத்தின் பிரித்தானிய கிளையினர் நடாத்தும் வீரமக்கள் தின நிகழ்வு எதிர்வரும் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

நிகழ்வு நடைபெறும் முகவரி:-
27 Hay Lane
Kingsbury
London
NW9 0NH
UK ??

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 25 குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் தலா 500 ரூபாய் பணமும் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. Read more

07.07.1991இல் வவுனியா மரக்காரம்பளையில் மரணித்த தோழர் நிசார் (மீரா மொகைதீன் நிசார் – மடவளை) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நேற்றைய தினம் (06) நாட்டில் மேலும் 38 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜீவன் என்ற சிறுவன் நேற்று (06) காலை 8 மணி அளவில் வெட்டுக்காயங்களுடன் வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். Read more

மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் கருவாங்கேணி சந்திக்கு அருகே சிறைச்சாலை பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான ஜயந்த கெட்டகொடவின், வெற்றிடத்தை நிரம்புவதற்கு, பெசில் ஹோரன ராஜபக்ஷவின் பெயர் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.