தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு தேரர்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமையை அடுத்து தலா 25 ரூபா பிணையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.