கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, திருக்கோவில் ஆகிய இடங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 26 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியில் தலா 1910 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று (2021/07/10) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளர் தோழர் சங்கரி மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த தோழர் கங்கா ஆகியோரால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.