மருத்துவ காரணங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார்.

எனினும், நேற்று  வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் அறிக்கைக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.