கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2021 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்