மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளைத் தோழர்களின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் அவருடைய கணவரான திரு மகேஸ் அவர்களால்
நுவரெலியா மாவட்டத்தின் அக்கரைப்பத்தனை, டயகம மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.