நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 308,812ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,906 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  277,118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 27,314 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.