யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று (01) முதல் தனி பல்கலைக்கழகமாக இயங்கவுள்ளது. அதன்படி, இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் பதிவாகியுள்ளது.

30 வருடங்களின் பின்னர் இந்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.