நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை கைவசம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நிராகரிப்போர் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருப்பது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.