இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட அனைத்து விதமான விஸாக்களின்  செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 8ஆம் திகதியுடன் முடிவடையும் விஸாக்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.