இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களை விட இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து பதிவான தொற்றாளர்களை விட இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் பதிவான கொவிட் மரண வீதம் இந்தியாவில் பதிவான இறப்புகளை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் கொவிட் விரிவாக்கத்தின் உச்சத்தில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களை விட இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.