திருமண வைபவமொன்றில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை   50 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் என்று தெரிவித்த கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த நடைமுறை இன்று(10)  நள்ளிரவு முதல் அமுலாகும் என்று அறிவித்துள்ளார்.