20 வயது முதல் 29 வயது  பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 வயது முதல் 29 வயது பிரிவினருக்கு இன்று(06) முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.