அமெரிக்க, நியூயோர்க்கில் செப்டெம்பர்21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், சர்வதேச கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல்
சந்தர்ப்பமும் இதுவாகும். பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்

அதன்​போது, பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்
கலந்துரையாடுவர். ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் செல்வர்.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்‌ஷவும் செல்லவுள்ளார். அவர்,
தனது சொந்தச் செலவில் இந்த விஜயத்தில் கலந்துகொள்கிறார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு
அறிவித்துள்ளது.