இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தன்னால் ஏற்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ்  அரசியல் கைதிகள் சிலருக்கு அமைச்சர் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.