மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரதாஸ் அவர்கள் இன்று (15.09.2021)காலமானார்.

இவர் கழகத் தோழர்களான நிம்மி, ரவி ஆகியோரின் சகோதரரும், தோழர் உமா அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)