Header image alt text

யுத்தம் முடிந்த பின்னர் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை பாராட்டியவர் இரா.சம்பந்தன். இயக்கங்களிற்கிடையில் மோதல் வருவதும், பின்னர் இணங்கிப் போவதும் சாதாரணமானது. அப்படித்தான் ஆயுத இயக்கங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தன. இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டும்தான் மன்னிக்கப்பட்டு கூட்டமைப்பிற்குள் இணைக்கப்பட்டது. ஆனால், சுமந்திரன் மட்டும் இன்னும் மன்னிக்கப்படவில்லை. அவரை கொல்ல வந்ததாக கூறி, அவரது பெயரால் இன்றும் இளைஞர்கள் சிறையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன். Read more

மியான்மாருக்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய பேராசிரியர் நளின் டி சில்வா, தனது பதவியை, இன்று (16) இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை நாடு திரும்பிய அவர், தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார். Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று (15) சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம். வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே எண்ணிக்கையைக் குறைக்கும் விசமத் திட்டத்தில் ஈடுபடுகிறார். இதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிப்பதா? கூடாது என பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல். Read more