கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.