மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை  சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (17)  தனது உயிரை மாயத்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்இ சிறுவர்கள் உட்பட 4 பேர் வைது செய்யப்பட்டுஇ வெள்ளிக்கிழமை (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்இ கள்ளியடி பகுதியைச் சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும்  இன்றைய தினம் (19)இ இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதேஇ மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.