40 சுகாதார தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று (22) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா விசேட கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை, சுகாதார ஊழியர்களுக்கு தேவையான போதியளவு உபகரணங்களை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார்.