கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 55  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 38 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை13,019 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 15 பேரும் 30 வயதுக்குட்பட்டவர்களில் 2 பேரும் மரணித்துள்ளனர்.