இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையில் இருந்து பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் புதன் கிழமை குறித்த விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் குறித்த விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இலங்கை சார்ப்பில் விஷேட விருந்தினர்கள் குழு ஒன்று பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.