நாளை (22) முதல் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

 அதன்படி, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்துவது குறித்து, மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் முடிவு செய்வார்கள் என்று, அவர் மேலும் கூறினார்.