சாஸ்திரிகூழாங்குளம் புதுக்குளத்தை பிறப்பிடமாகவும், தோணிக்கல்லை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத் தோழர் குட்டிமணி (ஞானசுந்தரம்) அவர்களின் தந்தையாருமான திரு ஞானப்பிரகாசம் பாக்கியநாதன் அவர்கள் நேற்று (28.10.2021) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரைப் பகிர்ந்து கொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.