யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு கொள்வனவுக்கான ஒரு தொகை நிதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது

பல்கலைக்கழக பரீட்சைகளுக்காக வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து விடுதிகளில் தங்கி இருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கே குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த அடை மழையினால் மாணவர்களுக்கான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட இடர்பாட்டை தொடர்ந்து பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் கஜதீபனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையினரின் நிதிப்பங்களிப்புடன் குறித்த உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.

இந்த உதவித் தொகையினை கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் மாணவர்களிடம் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தனர்.