வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சபிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தி’ என்ற தலைப்பிலான ஆர்ப்பாட்டம், பல தடைகளையும் தாண்டி கொழும்பில் இன்று(16) நடத்தப்பட்டது.