கழகத்தின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களுடைய 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் ஊரெழுவில் அமைந்துள்ள ஒக்சிலியன்ட் கொன்வென்ட் சிறுவர் காப்பகத்துக்கு விசேட மதிய உணவு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை தோழர்கள் ஜெகன், குமார், ஆனந்தன், வரதன், சிவா ஆகியோரின் அனுசரணையில் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் நினைவாக மதிய உணவு வழங்கும் செயற்பாடு இன்று இடம்பெற்றது.

இதன்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் பா.கஜதீபன், சுவிஸ் தோழர் செல்வபாலன், தோழர் கந்தசாமி, தோழர் கோண்டாவில் செல்வம்(அத்தான்), தோழர் முகுந்தன், தோழர் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.