இலங்கை இராணுவத்தின் 59ஆவது பதவி நிலை பிரதானியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

கஜபா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவி வகித்திருந்தார்.

இந்த நிலையில், இராணுவத்தின் 58ஆவது பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதனையடுத்து, மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.