கிளிநொச்சி முழங்காவில் கரியாலை நாகபடுவனைச் சேர்ந்த கழகத் தோழர் திலக் (வைரவன் சிவபாலன்) இன்று சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)