மட்டக்களப்பு பழுகாமம் வன்னிநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் கழகத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் எல்லாளன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கந்தசாமி சிவநேசம் அவர்கள் இன்று (08.12.2021) புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் காலமானார்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

குறிப்பு: அஞ்சலிகள் நாளை பிற்பகல் 12.30 மணிவரை அவரது இல்லத்தில் இடம்பெற்று இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து அவரது உடல் பழுகாமம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தொடர்புகட்கு; 0770762955 (எல்லாளன்)